புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் புறநோயாளிகளாக தினமும் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் என தனியாக இதுவரை அமைக்கப்படாமல் இருந்தது. மருத்துவமனையின் உள் பகுதியில் கட்டிடத்தின் ஒரு அறையில் புறக்காவல் நிலைய போலீசாருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருப்பார்கள். புறக்காவல் நிலையத்திற்கென தனியாக தொலைபேசி அல்லது செல்போன் எண் கிடையாது. விபத்தில் காயம், இறப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் இங்கிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிப்பது உண்டு.
புதிய கட்டிடம்
இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு எதிரே, இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம் அருகே புறக்காவல் நிலையத்திற்கென தனியாக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு போலீஸ் நிலையத்தின் அடையாளமான வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் கூடுதலாக போலீசார் பணியாற்றவும், வாக்கி-டாக்கி வைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்பட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இந்த கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.