விராலிமலை பகுதியில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவி வருவதையடுத்து அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விராலிமலை பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் விராலிமலை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் போது இங்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் வேலைபார்க்கும் இடங்களிலோ அல்லது தங்கியிருக்கும் பகுதியிலோ பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி, விராலிமலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.