புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பல நாட்களாக தண்ணீர் வராமல் இருந்து வந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவியிடம் கூறியும் சரி செய்யப்படாத நிலையில் அப்பகுதி மக்கள் 01.04.23 அன்று காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 01.04.2023 அன்று மாலைக்குள் தண்ணீர் வரும் என்று மக்களிடையே உத்திரவாதம் அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். அதேபோல அன்று மாலையே தண்ணீரும் வந்தது. இதை பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் இத்தனை நாட்களாக வேண்டுமென்றே ஊராட்சி நிர்வாகம் கெடப்பில் போட்டு மக்களை தண்ணீர் இல்லாமல் திண்டாட விட்டதாக மக்கள் தங்களது மன குமுறல்களை தெரிவித்தனர்.
மேலும் மக்கள் போராட்டம் நடத்தினால் தான் ஒவ்வொன்றிற்கும் தீர்வு கிடைக்கும் என்று போனால் நல்ல நிர்வாகத்திற்கு அழகில்லையென்றும், மெத்தனமாக செயல்படும் ஊராட்சி மன்ற நிர்வாகம் இனி வர கூடிய காலங்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு உடனே செவி சாய்த்து புகார் வந்தால் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.