கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் நிழல் தந்த மரத்தை இழந்ததால் கோடை வெயிலில் நிழலின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் நுழைவாயிலில் மக்களின் அடையாளமாக பழமை வாந்த ஆலமரம் இருந்து வந்தது. இந்த ஆலமரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிழல் தரக்கூடியதாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மற்றும் நண்பர்கள் அனைவரும் சந்திக்கும் இடமாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 07/09/2021 செவ்வாய் பிற்பகல் 1.40 மணியளவில் திடீர் என சரிந்து விழுந்தது.
கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் திடீரென வேரோடு மண்ணில் சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை, அவுலியா நகர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் அதே இடத்தில் நட்டனர். இந்நிலையில் அந்த ஆலமரம் இலைகள் துளிர் விட்டு மீண்டும் வளர்ந்து வந்தது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் இலைகள் அனைத்தும் காய்ந்து பட்டு போய் விட்டது.
தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நிழல் தந்த மரத்தை இழந்ததால் கோடை வெயிலில் நிழலின்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் மரம் நிழல் இல்லாததால் மக்கள் கவலையில் உள்ளனர். கவலையை போக்கும் விதமாக தற்பொழுது அழிந்த மரத்தை மீட்டெடுக்க அந்த இடத்தில் மூன்று புதிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த இடத்தில் கிராம சபை கூட்டம் பல்வேறு முக்கிய கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகளுக்கு GPM மீடியா சார்பாக கோரிக்கை:
வளர்ந்த மரத்தை அகற்றுவது எளிது, ஆனால் அதை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும்.
நமது ஊரை பசுமையான ஊராக மாற்ற ஊர் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக மரத்தை வளர்தத்தெடுப்போம்.
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!
மரம் வளர்ப்பு பற்றி நபி மொழி மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு
மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து மரம் வளர்க்க அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஊர் அக்கறையுடன்....
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.