கோபாலப்பட்டிணத்தில் ஜமாத்தார்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி!



கோபாலப்பட்டிணத்தில் ஜமாத்தார்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  ST ராமச்சந்திரன் MLA பரிந்துரையில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமலான் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர். நோன்பு திறக்கும் நேரத்தில் இப்தார் நிகழ்ச்சி பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத்தார்கள் முன்னிலையில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் பரிந்துரையில் காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் ஜமாத் பொறுப்பாளர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments