SP பட்டிணம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 50). இவருடைய மனைவி ராணி(40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் அருகே உள்ள தீர்த்தாண்ட தானம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கவ்வா ஊருணி அருகே சென்றபோது, அந்த வழியாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா வேன் வந்தது. அந்த வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் அசோகன், ராணி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அசோகன், ராணி ஆகியோரின் உடல்களை பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.