மணமேல்குடி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட சிறந்த மையத்திற்கும் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி ஆகியோர் தலைமையிலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெற்றது.
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 36 மையங்களில் நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட வடக்கு அம்மாபட்டினம் முஸ்லிம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறந்த மையமாக ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்டது.
இம்மையத்தில் கற்போர் தினமும் கற்கும் பணியில் ஈடுபட்டு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டனர். அதேபோல கற்போர்கள் ஆர்வத்துடன் தினமும் மையத்திற்கு வருகை தந்து வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியும் பெற்றனர்.
இதில் பணியாற்றிய தன்னார்வலர் தினமும் கற்போருக்கு மிகச்சிறந்த முறையில் எழுத படிக்கவும் அடிப்படை கணிதம் கற்றுக் கொடுத்தார். ஆகையால் இம்மையமானது சிறந்த மையமாக மணமேல்குடி ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் இல்லம் தேடி கல்வி மையத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் சண்முகப்பிரியா, சினேகா, மகா, அஸ்வதி, வனிதா மற்றும் சிறந்த குறும்படங்களை தயாரித்து வழங்கிய சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்கள் கனிமொழி, உதயநிலா, பிரியங்கா, ஷர்மிளா பேகம், பர்வின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனைத்து தொடக்க மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், வேலுச்சாமி, அங்கையர் கன்னி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்னண் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.