மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா மற்றும் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மாணவர்கள் கொண்டாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
வானவில் மன்றம் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவினை மணமேல்குடி வட்டார வளமையும் மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
வெட்டிவயல் கவுன்சிலர் திரு. முத்துக்குமார் அவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு ராசப்பா அவர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி கோசலை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஹாலிது மரைக்காயர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு கண்னண் அவர்கள் நன்றி கூறினார்.
இல்லம் தேடிக் கல்வி மைய கருத்தாளர் சண்முகப்பிரியா எளிய அறிவியல் சோதனைகள், எண் கணித விளையாட்டுகள், அறிவியல் அற்புதங்கள், உள்ளூர் வளங்களை பயன்படுத்தி வரைபடங்கள் வரைதல், ஆடலும் பாடலும், கைத்திறனும் கற்பனையும், போன்ற அறிவியல் சோதனைகள் செய்து காட்டினார்கள்.
மேலும் இல்லம் தேடிக் கல்வி மையம் தன்னார்வலர் பிரபா சரஸ்வதி டாக்டர் அம்பேத்கர் விருது வாங்கியதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் இல்லம் தேடிக் கல்வி மையம் ஒருவருடம் சிறப்பாக செயல்பட்டதை
கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ரேவதி, கௌசல்யா, கற்பகம், இந்துமதி, துர்கா, பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.