திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டி ரோட்டரி இணைந்து நாளை 20/05/2023 மாபெரும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகின. மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்று மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் அறந்தாங்கி திஃ போர்ட் சிட்டி ரோட்டரி இணைந்து நடத்தும் அடுத்து என்ன படிக்கலாம் மாபெரும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை 20/05/2023 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் அறந்தாங்கி பொற்குடையார்கோவில் அருகில் உள்ள IMA ஹாலில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்து என்ன படிக்க வேண்டும் என்றும் என்ன படித்தால் எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற கேள்விகளுக்கு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள், ஆசிரியர், சட்டப் படிப்புகள், வேளாண்மை சார்ந்த படிப்புகள் மற்றும் கல்விக்கடன் பெறுவது குறித்து அனைத்து விதமான கேள்விகளுக்கும் துறை ரீதியான வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
ஆகவே சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு அடுத்து என்ன படிக்கலாம் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
IMA அறந்தாங்கி கிளை, அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு தங்களை அன்புடன் அழைக்கிறது.
தொடர்புக்கு: 9715840380
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.