அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கல்!



அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் நிர்வாகி சாத்தியடி சமூக சேவகர் பாலுச்சாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் அமுத சுரபி திட்டத்தின் கீழ் ஆவுடையார்கோவில் ஒன்றியம் கதிராமங்களம் ஊராட்சி பெருங்குளம்-மேலவயல் கிராமத்தில் புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் கலைபிரபு தலைமை, தெட்சிணாபுரம் திரு.செந்தில்குமார் முன்னிலையில் மரகன்றுகள் நடவு செய்யப்பட்டு, மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இதில் சாத்தியடி, முருகானந்தம், சாத்தையா, சந்தோஷ், பெருங்குளம் ராஜேஸ், சதிஷ், புகைப்படகலைஞர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments