பள்ளிகள் இன்று திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது.
மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் வகுப்புகள் தொடக்கத்திற்காக பள்ளி தரப்பிலும் காத்திருந்தனர். இதேபோல தங்களது குழந்தைகளை பள்ளிக்கு முதன் முதலாக அனுப்புவதில் பெற்றோரும் ஆர்வத்தோடு இருந்து வருகின்றனர்.
விலையில்லாபாடப்புத்தகங்கள்
இந்த நிலையில் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி தங்களது குழந்தைகளுக்கு தேவையான எழுதுபொருட்கள், காலணிகள், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகளை வாங்கி தயாராக வைத்துள்ளனர். இதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளிலும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயாராக உள்ளது. மாணவ-மாணவிகளை வரவேற்க ஆசிரியர்களும் தயாராக உள்ளனர். சிறப்பு ஏற்பாடுகள் அந்தந்த பள்ளி தரப்பில் செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.