திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் புதிய முனையத்தின் பணிகள் இறுதி கட்டத்தில்




திருச்சி விமான நிலையத்தில் ரூ.951.28 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

​வண்ண ஓவியங்கள்
திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட இருக்கிறது. இந்த விமான நிலையமானது 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

​48 பரிசோதனை கவுன்ட்டர்கள்
மேலும் 48 பரிசோதனை கவுன்ட்டர்களும், 10 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு அறை, தொழில்நுட்ப அறை, ரேடார் கருவி மற்றும் இதர கருவிகள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

​சுற்றுலா தளங்கள்
மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்த புதிய முனைய கட்டுமான பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது.

​துரிதமாக நடந்து வருகிறது
மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்த புதிய முனைய கட்டுமான பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

​மக்கள் எதிர்ப்பார்ப்பு 
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் புதிய முனையத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படத்தையும் அதிகாரிகள் பகிரிந்துள்ளனர். இதன்மூலம் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து விரைவில் விமான நிலையம் முனையம் திறக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து காத்துகொண்டுள்ளனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments