திருச்சி விமான நிலையத்தில் ரூ.951.28 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
வண்ண ஓவியங்கள்
திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட இருக்கிறது. இந்த விமான நிலையமானது 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
48 பரிசோதனை கவுன்ட்டர்கள்
மேலும் 48 பரிசோதனை கவுன்ட்டர்களும், 10 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு அறை, தொழில்நுட்ப அறை, ரேடார் கருவி மற்றும் இதர கருவிகள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.
சுற்றுலா தளங்கள்
மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்த புதிய முனைய கட்டுமான பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது.
துரிதமாக நடந்து வருகிறது
மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்த புதிய முனைய கட்டுமான பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் எதிர்ப்பார்ப்பு
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் புதிய முனையத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படத்தையும் அதிகாரிகள் பகிரிந்துள்ளனர். இதன்மூலம் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து விரைவில் விமான நிலையம் முனையம் திறக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து காத்துகொண்டுள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.