புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் கிராமமானது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும். எனவே இந்த கிராமத்தில் தமிழ்நாடு அரசின் துணை சுகாதார நிலையம் கடந்த எட்டு மாதத்திற்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த துணை சுகாதார நிலையமானது வாரத்தில் ஐந்து நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்தில் ஒரு கிராம சுகாதார செவிலியர் பணி செய்து வருகிறார்.
துணை சுகாதார நிலையத்தில் பார்க்கப்படும் மருத்துவங்கள்:
- அவசர முதலுதவி சிகிச்சை
- காய்ச்சல், சளி, இருமல்
- அனைத்து நோய்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்படும்
- இலவச சர்க்கரை நோய் (சுகர்) பரிசோதனை
- இலவச இரத்த அழுத்த (பிரஷர்) பரிசோதனை
- கர்பிணி பெண்களுக்கான அவசர காலத்தில் ஆலோசனை வழங்குவது
- இரத்த காயங்களுக்கு கட்டுக்கட்டி முதலுதவி சிகிச்சை
- தொற்று நோய்கள் ஏற்படுவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது
- சாதாரண நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது
- பெரிய அளவிலான நோய்களுக்கு எங்கு சென்று மருத்துவம் செய்வது என்று வழிகாட்டுவது
- 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்க்கே நேரடியாக வந்து மருத்துவம்
ஆகவே காய்ச்சல், சளி, இருமல், பொது மருத்துவம் மற்றும் ஆலோசனைகளுக்கு கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் அமைந்துள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோபாலப்பட்டிணம் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.