கோபாலப்பட்டிணம் ஷபா தெரு (TNTJ பள்ளிவாசல் தெரு) 3-வது வீதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.28 லட்ச மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் 18/04/2022 அன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் 2021-2022 கீழ் பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த 03/11/2022 அரசு இணையதளத்தில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு சுமார் 97மீட்டர் அளவில் ரூ.5,28000 மதிப்பீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 19/07/2023 அன்று முழுமையாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு 20/07/2023 அன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்த 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்ஷா, அப்துல் மஜீது மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.
புகைப்பட உதவி: உதுமான், கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.