மீமிசலில் பிரசித்தி பெற்ற கல்யாண ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடி மாத உற்சவ திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா தீர்த்தாண்டதானம், சுந்தரபாண்டியபட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் தங்களது நாட்டுப்படகை மீமிசல் கல்யாண ராமசுவாமி குளத்திற்கு கொண்டு வந்து 4 படகுகளை ஒன்றாக இணைத்து அதன் மேல் அலங்கரிக்கப்பட்ட தளத்தில் கல்யாண ராமசாமி, லட்சுமணர், சீதை ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகள் குளத்ைத நான்கு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.