அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அலையாத்தி மரங்கள் உள்ளன. இவை சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவிலிருந்து கடற்கரையோரம் வாழும் மக்களை காப்பாற்றும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.
கடந்த சுனாமி தாக்கத்தின்போது நாகை உள்ளிட்ட பல்வேறு கடல்பகுதிகளில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் வசித்து வந்த மக்களில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் ஆடு, மாடுகளின் உயிர்களை பறித்தது. அதே வேளையில் திருவாரூர் மாவட்ட கடற்பகுதியான முத்துப்பேட்டை மற்றும் தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் எந்த பாதிப்பும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அலையாத்தி மரங்களை இறைவன் தங்களுக்கு அளித்த இயற்கை பாதுகாப்பு அரணாக எண்ணி போற்றி வருகின்றனர்.
கஜாபுயலின் போது நூற்றுக்கணக்கான அலையாத்தி மரங்கள் சாய்ந்தும், பட்டுபோயும் கிடக்கின்றன. மேலும் அலையாத்தி மரங்கள் மட்டுமல்லாமல் சமூக நலக்காடுகளில் உள்ள ஏராளமான மரங்களும் வேரோடு சாய்ந்து போய்விட்டன. இதனால் இப்பகுதியில் உள்ள வன ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் இது போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து கரையோரம் வசிக்கும் மக்களை காக்க வேண்டுமென்றால் அலையாத்தி மரங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.