புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி உப்பளத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காந்தி கபடி விளையாட்டு கழகத்தால் 4-ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இரவு பகலாக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மதுரை அணிக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரமும், சுழற்கோப்பையும், 2-ம் இடம் சேலம் அணிக்கு ரூ.20 ஆயிரம், சுழற்கோப்பையும், 3-வது இடம் திருச்சி அணிக்கு ரூ.10 ஆயிரமும், 4-வது இடம் நாமக்கல் அணிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பு பரிசு மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற அணிகளுக்கும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டியை காந்தி கபடி விளையாட்டு கழகத்தை சேர்ந்த மகேந்திரன் சிறப்பாக நடத்தினார். இதில் ஒன்றிய துணை தலைவர் சீனியார் மற்றும் அரசியல் பிரமுகர்களும், ஊராட்சி உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், கிராமமக்கள், கபடி ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.