புதுக்கோட்டை அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வியாபாரி பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
பள்ளத்தில் கவிழ்ந்தது
சென்னையில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வழியாக காரைக்குடி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 17 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்நிலையில், திருமயம் அருகே முன்னால் சென்ற லாரியை பஸ் முந்தி செல்ல முயன்ற போது, திடீரென லாரி திருமயம் நகருக்குள் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் லாரி மீது மோதி அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியும், பஸ்சும் பள்ளத்தில் கவிழ்ந்தன.
வியாபாரி பலி
மோட்டார் சைக்கிளில் வந்த துணி வியாபாரியான காரைக்குடி பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 44) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
இதில் பஸ்சில் பயணம் செய்த பிரிட்டோ (24), சாந்தி (51), விக்னேஷ் (31), ஞானபிரமிளா (25), மரியராஜ ரத்தினம் (60) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.