மின் கட்டணம் கட்டவில்லையென மெசேஜ் வந்தால் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம், இது ஒரு மோசடி மெசேஜ் என தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் மோசடி
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி பணம் பறித்து ஏமாற்றுதல், புகைப்படத்தை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டுதல் என்று மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இதன் அடுத்த கட்டமாக மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் போதும் நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உங்கள் வீட்டில் மின் கட்டணம் கட்டவில்லையெனவும், இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட இருப்பதாக தெரிவித்து எஸ்எம்எஸ் வரும். இதனை திறந்து பார்த்தால் அதில் ஒரு லிங்க் இருக்கும். இதனை திறந்தால் நமது வங்கியில் உள்ள பணம் திருடப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்ந்து புகார் வந்ததையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது. அப்படி குறுஞ்செய்தி வந்தால்
1. பதட்டம் அடைய வேண்டாம்,
2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்,
3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்,
4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்,
5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்,
6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும் என தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற குறுஞ்செய்தி மோசடி மெசேஜ் என மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது.
செய்தி சுருக்கம்
EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது
✦ பதட்டம் அடைய வேண்டாம்
✦ உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
✦ அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
✦ இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
✦ உடனடியாக 1930-ஐ அழைத்து புகார் அளிக்கவும்
✦ உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்
- தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.