மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம்




மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவையொட்டி அகமுடையார் நலச்சங்கத்தினரால் மாட்டு வண்டி எல்கை பந்தயம் மணமேல்குடியில் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என 3 பிரிவுகளாக நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இந்த பந்தயத்தை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இந்த பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், சிறப்பு பரிசாக தட்டு வண்டி, டி.வி., பிரிட்ஜ் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் மணமேல்குடி போலீசார் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments