நாகப்பட்டினம் - திருவனந்தபுரம் அரசு விரைவு பேருந்து இனி மல்லிப்பட்டினத்தில் நின்று செல்லும் - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகர்கோவில் நாகப்பட்டினம் - திருவனந்தபுரம் பேருந்து இயக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் - திருவனந்தபுரம்
தினசரி நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 04.01 மணிக்கு புறப்படும் பேருந்து அடுத்து நாள் காலை 05.31 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
திருவனந்தபுரம் - நாகப்பட்டினம்
தினசரி திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புறப்படும் பேருந்து அடுத்து நாள் காலை 05.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும் இந்த பேருந்துக்கு திருத்துறைப்பூண்டி அடுத்து தூத்துக்குடியில் தான் நிற்கும் இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் நின்று செல்ல கோரி மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் முகைதீன் அவர்கள் முதலமைச்சர் தனி பிரிவில் மனு அளித்து இருந்தார்கள் இதன் மூலம் மல்லிப்பட்டினத்தில் நிறுத்தம் கிடைத்தது உள்ளது.
ஏற்கனவே இதுபோன்று வேளாங்கண்ணி - கன்னியாகுமரி பேருந்தும் மல்லிப்பட்டினத்தில் நின்று செல்கிறது.
இது குறித்து மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் முகைதீன் அவர்கள் கூறுகையில்
வேளாங்கண்ணியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் பேருந்திற்கு மல்லிப்பட்டினத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
மல்லிப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி சுற்றுப்பயணம் செல்ல விரும்புகிறவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி கொள்ளலாம் பயண கட்டணம் வெறும் ரூ.447 மட்டுமே.
மல்லிப்பட்டினத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6 மணிக்கு கன்னியாகுமரி சென்று அடைகிறது மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2:30 மணியளவில் மல்லிப்பட்டினம் வந்து சேருகிறது இச்சவையை நமது ஊர் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நாகப்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அரசு விரைவு பேருந்திற்கு மல்லிப்பட்டினத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
மல்லிப்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்ல ரூ.600 மட்டுமே பேருந்து கட்டணம் நமது ஊரை சேர்ந்த மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பேருந்தின் மூலம் தூத்துக்குடி திருநெல்வேலி நாகர்கோயில் மார்த்தாண்டம் போன்ற முக்கிய ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜலில் முகைதீன் அவர்களுக்கு அனுப்பிய செய்தியில்
SETC சிறந்த சேவையை பயணிகளுக்கு வழங்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
தடம் எண் 561E மற்றும் 771E ஆகிய தடங்களில் மல்லிப்பட்டினம் ஏறுமிடமாகவும் இறங்குமிடமாகவும் இணையதள முன்பதிவில் அறிவிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் மூன்று தினங்களில் இணையதளத்தில் ஏற்படுத்தித் தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே, தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை தெரிவிக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.