அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொடிவயலில் குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து 34 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் நடுமாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சாலையில் எல்லையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.

குதிரை வண்டி பந்தயம்

இதேபோல் குதிரை வண்டி பந்தயத்தில் மொத்தம் 26 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குதிரை, மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் பந்தயத்தில் மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிக்கு கொடி பரிசு மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

சாலையின் இரு புறத்திலும் பொதுமக்கள் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகுடி போலீசார் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments