அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொடிவயலில் குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து 34 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதில் நடுமாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சாலையில் எல்லையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.
குதிரை வண்டி பந்தயம்
இதேபோல் குதிரை வண்டி பந்தயத்தில் மொத்தம் 26 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குதிரை, மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் பந்தயத்தில் மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிக்கு கொடி பரிசு மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
சாலையின் இரு புறத்திலும் பொதுமக்கள் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகுடி போலீசார் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.