ஏம்பல் அருகே திருட்டு போன 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு




அரிமளம் ஒன்றியம் ஏம்பல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 70). இரும்பாநாடு அருகே சந்திராபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (57). இவர்கள் தங்களுடைய வயல்கள் முன்பு தங்களுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். வயல் வேலையை முடித்து திரும்பி வந்து பார்த்த போது 2 பேருடைய மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை. இது தொடர்பாக ஏம்பல் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஏம்பல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் ஆவுடையார்கோவில் அருகே ஒரு மோட்டார் சைக்கிளை திருடிய சிவகங்கை மாவட்டம் பீர்கலைகாடு சாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த தர்மன் (25) என்பவரை பொதுமக்கள் பிடித்து ஆவுடையார்கோவில் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, விசாரித்த போது ஏம்பல் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இரும்பாநாடு அருகே உள்ள பாலத்தின் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments