ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் இணைந்து சம்பா பருவத்தில் விதைப்பு செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களில் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து வயல்வெளியில் ஆய்வு செய்தனர். பூவலூர், வீளிமங்கலம் போன்ற பகுதிகளில் நெல் சம்பா விதைப்பு செய்துள்ள பயிர்களில் இலை சுருட்டு புழு மற்றும் ஆனை கொம்பான் காணப்பட்டது. இதையடுத்து, ஒரு ஏக்கருக்கு கார்போ சல்பான் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 400 மில்லி என்ற மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் என விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தேசிய பயிர் வகை ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானி ரமேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன், வேளாண்மை அலுவலர் முகமது ரபி உள்பட பலர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.