புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகர் மித்ரா நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்






 புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 32 மீனவ கிராமங்களில் காலியாக உள்ள ஏம்பவயல் மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகர் மித்ரா நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகர் மித்ரா நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகர் மித்ரா நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்…
சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவிக்கையின் படி, மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தமிழகத்தில் சாகர் மித்ராக்கள் ஒப்பந்த அடிப்படையிலான நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியரின் வாயிலாக செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நியமனம் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 32 மீனவ கிராமங்களில் காலியாக உள்ள ஏம்பவயல் மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா நியமனம் செய்ய வேண்டியுள்ளது.
சேர்வதற்கான அத்தியாவசிய தகுதிகள்..,
Minimum Bachelor Degree in Fisheries Sciences (OR) Minimum Bachelor Degree in Marine Biology (OR) Minimum Bachelor Degree in Physics, chemistry, Botany, Zoology, Biochemistry, Microbiology, (WITH) Knowledge in Information Technology (IT) shall be given preference ஆகும்.
தகுதி வரம்பு, விண்ணப்பம் செய்த நபர் தொடர்புடைய மீனவ கிராமம் / வருவாய் கிராமத்தை சேர்ந்த தாலுகாவில் இருத்தல் வேண்டும். தொடர்புடைய மீனவ கிராமம் / வருவாய் கிராமத்தை சேர்ந்த தகுதியானவர்கள் இல்லை என்றால் அருகில் உள்ள மீனவ கிராமம் / வருவாய் கிராமம்/ தாலுகாவை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். (சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்குட்பட்ட). வயது வரம்பு 01.07.2023 இல்உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படக்கூடாது. ஊதியம் மாதம் ஒன்றிற்கு ஊக்கத்தொகைரூ.15,000/- வழங்கப்பட்டும்.

எனவே மேற்குறிப்பிட்ட ஒரு மீனவ கிராமத்தில் சாகர் மித்ரா நியமனம் செய்ய தகுதியுள்ள நபர்கள் 04.01.2024-க்குள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments