பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1,000, முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வீடு, வீடாக வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்கள் இந்த டோக்கன் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டோக்கன் எண்
இந்த டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், தெரு விவரம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது. இதில் டோக்கன் எண்ணை வரிசைப்படி எழுதியும், பரிசு தொகுப்பை வாங்க வர வேண்டிய தேதி மற்றும் நேரம் விவரத்தையும் அதில் ரேஷன் கடை ஊழியர்கள் எழுதி வினியோகித்தனர்.
இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் வந்து பரிசு தொகுப்பை வாங்கி செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். வருகிற 10-ந் தேதிக்குள் இந்த டோக்கன் வினியோகிக்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் 10-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.