அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மேட்டுப்பட்டி, புதுநகர் காலனி, வேளாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தொறும் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில் அவர்கள் பழனி பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக முதலில் முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள மலைமீது அமைந்துள்ள முகைதீன் ஆண்டவர்மலை தர்காவில் சிறப்பு வழிபாடு செய்வார்கள். அதன்படி நேற்று அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள முகையதீன் ஆண்டவர்மலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர். மதநல்லிணக்கத்திற்க எடுத்துக்காட்டாக பக்தர்கள் தர்காவில் வழிபாடு நடத்தியதும், அவர்களை முஸ்லிம்கள் வழியனுப்பி வைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.