ஆவுடையார்கோவில் அருகே மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்




ஆவுடையார்கோவில் சரக வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பூவளூர் கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, கிராம உதவியாளர் வசந்தகுமார் ஆகியோர் வெள்ளாற்றுப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பாண்டிபத்திரம் அருகே வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டு வந்த 3 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாட்டுவண்டிகளை அதிகாரிகள் ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments