மீனவ வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை மாலுமி பணிகளில் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேர்வதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் 90 நாட்கள் நடைபெறும். மேற்படி பயிற்சிகள் பிப்ரவரி மாதம் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு நடைபெறும். பயிற்சி கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகையும் வழங்கப்படும். இதற்கு கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று, உடல் தகுதியும் பெற்றுள்ள மீனவ வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்கள் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் கிடைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.