கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 2 வீதிகளில் புதிய சிமெண்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது




கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 4, 5  வீதியில் சிமெண்ட் ரோடு வேலை பணிகள் நிறைவு அடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பல ஆண்டுகளாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வந்தனர்.

இந்நிலையில் கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் 4 மற்றும் 5-ஆம் வீதியில் கடந்த 15.12.2023 வெள்ளிக்கிழமை  சிமெண்ட் ரோடு வேலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்றது.

 இந்த சாலையானது‌  AGMT திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில்  ஒரு சாலையின் அளவு 132 மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கும் வந்துள்ளது.

விரைவில் அவுலியா நகர் 6-வது வீதியிலும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments