அதிராம்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள்கள் மீது ஜீப் மோதி 2 பேர் படுகாயம்




அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது31). இவர்அதிராம்பட்டினத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரியில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கிழக்கு கடற்கரை சாலை வழியில் ஜீப்பை ஓட்டி கொண்டு வந்தார். அப்போது அதிராம்பட்டினத்தில் இருந்து புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ராவுத்தர் (45), இதே பகுதியை சேர்ந்த அராபாத் (36) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்த ரஜினிகாந்த் (46) ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராஜாமடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிப்புறக்கரை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே கார்த்திகேயன் ஓட்டி வந்த ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் முகமது ராவுத்தர் மற்றும் அராபாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிறிய அளவில் காயம் அடைந்த கார்த்திகேயன் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த் எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது தொடர்பான புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments