ஜெகதாப்பட்டினத்தில் தமுமுக சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி




ஜெகதாப்பட்டினத்தில்  தமுமுக சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 

புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஜெகதாப்பட்டினம் (கிளை)சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று 25.02.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கிளை தலைவர்  ராஜா முகமது தலைமையில் நடைபெற்றது

தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.

 மணமேல்குடி ஒன்றிய மமக செயலாளர் ரூபி ரபீக் சாலைபாதுகாப்பு பலகையை திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் மமக மாநில செயற்குழு நவாஸ்கான் மற்றும் மாவட்ட துணைதலைவர் MSK முகமது சாலிகு ஆகியோர் பல்வேறு இடங்களில் கழக  கொடிகளை ஏற்றினார்கள். இந்நிகழ்வில் ஜெகதாப்பட்டினம் கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments