கோபாலப்பட்டிணத்தில் மதரஸாக்கள் நாளை (ஏப்ரல்-22) திறப்பு






கோபாலப்பட்டிணத்தில் உள்ள மதரஸாக்கள் நாளை (ஏப்ரல்-22) திறக்கப்படுகிறது. 

கோபாலப்பட்டிணம் மதரஸாக்களுக்கு கடந்த மார்ச் மாதம்  நோன்பு கால விடுமுறை விடப்பட்டது. நோன்பு கால விடுமுறைக்கு பின்பு கோபாலப்பட்டிணம் முழுவதும் நாளை 22/04/2024 திங்கட்கிழமை மதரஸாக்கள் திறக்கப்பட உள்ளன.

கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸாக்கள் நாளை 22/04/2024 திங்கட்கிழமை திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அது சமயம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய நேரத்தில் மதரஸாவிற்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் நேரம்:

காலை- 7.00 மணி முதல் 8.00 மணி வரை
மாலை- அஸர் தொழுகைக்கு பின் 5.30 மணி வரை

ஆண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடங்கள்:

•பெரியபள்ளிவாசல் மாடி
•ஜமாஅத் பில்டிங் மாடி
•காட்டுகுளம் பள்ளிவாசல் வளாகம்
•அவுலியா நகர் பள்ளிவாசல் வளாகம்
•கடற்கரை பள்ளிவாசல் வளாகம்

பெண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடங்கள்:

•ஜமாஅத் பில்டிங் மாடி

•கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா குர்ஆன் பாடசாலை (நூருல் அய்ன் வளாகம்) 

ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா மற்றும் ஆண்கள் ஹிஃப்ழு மதரஸாவும் நாளை 22/04/2024  திங்கட்கிழமை
அன்று  திறக்கப்படுகிறது.

கல்வி பற்றி நபிமொழி:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
1. நிலையான அறக்கொடை 
2. பயன்பெறப்படும் கல்வி. 
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. 

அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி)  நூல்:ஸஹீஹ் முஸ்லிம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments