இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்




இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை 25 சதவீதம் ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அந்தவகையில் 2024-25-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் காலி இடங்கள் குறித்த விவரங்களை அந்தந்த பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வருகிற 10-ந்தேதி தெரிவிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்கள் www.tnemis.tnschools.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இடங்களுக்கு வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 20-ந்தேதி வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 29-ந்தேதிக்குள் முடிக்கவும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு மேல் விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த இடங்களுக்கு குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments