நாளை ஓட்டுப்பதிவு: தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம் செல்போன் எண்கள் அறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினமான நாளை (வெள்ளிக்கிழமை) தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்திட வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களை 100 சதவீதம் வாக்களித்திட அறிவுறுத்திட வேண்டும். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும், முதலாளிகளால் வழங்கப்பட்ட ஊதிய விடுமுறையை உறுதி செய்ய மாவட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று விடுமுறை அளிக்காவிட்டால் கண்காணிப்பு அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வாளர் நடராஜனை 99421 31921, புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பிச்சைமணியை 9894150578, புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பழனியம்மாளை 97889 92009, அறந்தாங்கி தொழிலாளர் உதவி ஆய்வாளர் குணசீலனை 98945 74212 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments