தொண்டியில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்




தொண்டி பேரூராட்சியில் திருவாடானை தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் புதிய பஸ் நிலையம், பாவோடி மைதானம், வட்டானம் விலக்குசாலை, பழைய பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments