அறந்தாங்கியில் வைக்கோல் விற்பனை மும்முரம்




அறந்தாங்கி பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்குள்ள விவசாயிகள் விவசாயம் இல்லாத நேரங்களில் மற்ற வேலைக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்தும் வருகின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் கடலை கொடிகளை வாங்கி சேகரித்து வருகிறார்கள். கடலை கொடி ஒரு வண்டி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். இந்த கடலை கொடிகளை விவசாய நிலத்தில் இருந்து ஏற்றி வீடுகளில் இறக்குவதற்கு குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு கூலி தொகை அதிகமாகிறது. கோதுமை தவிடும் கிலோ ரூ.35-க்கு விற்பனை ஆகிறது. கடலை கொடி விலை கூடுவதால் வைக்கோல் விலை விற்பனை அதிகமாகி வருகிறது. இதனால் அறந்தாங்கி பகுதியில் வைக்கோல் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வைக்கோல் கட்டு ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments