தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் 2வது இரத்ததானம் முகாம், 22.04.2024 திங்கள்கிழமையன்று, வடக்கு அம்மாபட்டினம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு, மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இதில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லா மற்றும் கிளை நிர்வாகிகள் இமாம்தீன், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த முகாமில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
மருத்துவ தகுதி அடிப்படையில், 30 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும், மருத்துவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
மேலும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபுயுல்லா அவர்கள் நன்றியுறை நிகழ்த்தினார்கள்.
அவர் கூறும்போது "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்"
என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்கள்.
இறுதியாக, இம்முகாமில் பங்களிப்பு செய்த, இரத்த வங்கி மேலாளர் மருத்துவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி சகோதரர்கள் ஆகியோருக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும், கிளை நிர்வாகி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், வடக்கு அம்மாப்பட்டினம் கிளை நிர்வாகம் சார்பாக நன்றியினைத் தெரிவித்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.