தொண்டி அருகே உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி-கார் மோதல் 3 பேர் பலி




லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

லாரி-கார் மோதல்

நாகை மாவட்டம் பி.ஆர்.பட்டினத்தில் இருந்து கார்த்திக் (வயது 20), மலைராஜன், அக்கரைப்பேட்டை ராஜசேகர் (25), நாகூர் சம்பாதோட்டம் சஞ்சீவ்காந்தி (25) ஆகியோர் தூத்துக்குடி தருவை குளத்தில் படகு வாங்குவதற்காக காரில் நேற்று வந்து கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே உப்பூர் தெற்கு குடியிருப்பு விலக்கு ரோடு பகுதியில் வந்தனர். அப்போது எதிரே தென்காசியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரியும், அந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய கார்த்திக், மலைராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரின் பின்புறம் அமர்ந்து வந்த ராஜசேகர், சஞ்சீவ் காந்தி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

3 பேர் பலி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஒருவரை மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே விபத்து குறித்து அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments