லாரி-கார் மோதல்
நாகை மாவட்டம் பி.ஆர்.பட்டினத்தில் இருந்து கார்த்திக் (வயது 20), மலைராஜன், அக்கரைப்பேட்டை ராஜசேகர் (25), நாகூர் சம்பாதோட்டம் சஞ்சீவ்காந்தி (25) ஆகியோர் தூத்துக்குடி தருவை குளத்தில் படகு வாங்குவதற்காக காரில் நேற்று வந்து கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே உப்பூர் தெற்கு குடியிருப்பு விலக்கு ரோடு பகுதியில் வந்தனர். அப்போது எதிரே தென்காசியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரியும், அந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய கார்த்திக், மலைராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரின் பின்புறம் அமர்ந்து வந்த ராஜசேகர், சஞ்சீவ் காந்தி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
3 பேர் பலி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஒருவரை மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே விபத்து குறித்து அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.