மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 88.02 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 88.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

88.02 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவ-மாணவிகள் தங்களது செல்போனில் இணையதளத்தில் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 178 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 818 மாணவர்களும், 11 ஆயிரத்து 266 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 84 பேர் எழுதினர்.

இதில் 8 ஆயிரத்து 132 மாணவர்களும், 10 ஆயிரத்து 426 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 558 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 88.02 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 86.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.03 சதவீதம் அதிகரித்துள்ளது.

அரசு பள்ளிகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் தர வரிசையில் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 29-வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டு 30-வது இடத்தில் இருந்தது. தற்போது தேர்ச்சி விகிதம் அதிகரித்ததால் பட்டியலில் முன்னேற்றமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 178 பள்ளிகளில் 6 அரசு பள்ளிகள் உள்பட 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

அரசு பள்ளிகளில் புதுக்கோட்டை மாவட்ட அரசு மாதிரி பள்ளி, தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 அரசு பள்ளிகள் ஆகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments