புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு, அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், மணமேல்குடி, பொன்னமராவதி, திருமயம், விராலிமலை ஆகிய அலுவலகங்களில் சட்ட தன்னார்வலராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ. பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞராக பதிவு செய்யும் வரை), அரசியல் அமைப்பு சாராத, பொதுச்சேவை புரியும் தொண்டு நிறுவனங்களை சார்ந்த உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிகுழுக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணிபுரியும் தொண்டு நிறுவனங்களை சார்ந்த உறுப்பினர்கள், நீண்ட கால தண்டணை பெற்று சிறையில் இருந்துவரும், நன்னடத்தை கொண்ட, கல்வி பயின்ற கைதிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தை https://districts.ecourts.gov.in/pudukkottai என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் `தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், புதுக்கோட்டை' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் 29-ந் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் என சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.