திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் முதல் உப்பூர் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை சேதம் அடைந்து சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதனால் இந்த சாலையில் தினமும் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்,பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கி காயம் அடைவது தொடர்கிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் காட்டு கருவேல மரங்களும், முட் செடிகளும் புதர்மண்டி காணப்படுவதாலும் சாலையின் எதிரே வரும் வாகனங்களை பார்க்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும் சாலையோரம் உள்ள முட்செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.