கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்றம் சார்பில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது
சாலை ஓரத்தில் கருவேல மரம்
நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை புதுக்கோட்டை மாவட்டம் வழியாக செல்கிறது. புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்திரிகர்களும் ராமேஸ்வரம், ஏர்வாடி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற ஆன்மீக தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் ராமேஸ்வரம், தூத்துக்குடி பாம்பன், தொண்டி கோட்டைப்பட்டிணம் ,.ஜெகதாப்பட்டிணம் கட்டுமாவடி, நாகப்பட்டினம் பகுதிகளிலிருந்து மீன் உள்ளிட்ட கடல் சார் பொருட்கள், மற்ற இதர பொருட்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது.
இதனைப் போன்று காரைக்கால் ,தூத்துக்குடி பெரிய துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் பஸ்கள், பள்ளி, கல்லூரி வேன்கள் மற்றும் டூவீலர்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் என இந்த பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்கள் அதிகமாக செல்கிறது.
பிரதான சாலையாக உள்ள இதில் சில இடங்களில் சாலையோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருகிறது. இதனால் ஒரே நேரத்தில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரும் போது இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் ஒதுங்கினால் அந்த சீமைக்கருவேல மரச்செடிகளின் கிளைகள் அவர்கள் மீதோ அல்லது வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீதோ படக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படக்கூட நேரிடலாம்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் விபத்துகள் ஏற்படும் வண்ணம் வளர்ந்து காணப்பட்டன.
குறிப்பாக கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி புதுக்குடி சாலையில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டது.
விபத்தை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்றம் சார்பில் பொக்லின் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றினர்.
கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்றத்திற்கு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் நன்றி பாராட்டு தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.