தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக நடைபெற்ற மழைத் தொழுகை!




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்  ஆர் புதுப்பட்டினம் கிளை சார்பாக இன்று வியாழக்கிழமை 02.05.2024 அன்று ஆர் புதுப்பட்டினத்தில் மழைத் சிறப்பு  தொழுகை நடைபெற்றது.நாம் வாழ்ந்து வரும் தற்போதைய காலத்தில் இந்த வெயிலின் வெப்பமானது மனிதர்களை எரிக்க கூடிய அளவிற்கு வெப்பம் கடுமையாக இருக்கிறது இது போன்று வெப்பம் மற்றும் மழை இல்லாத காலகட்டங்களில் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) நமக்கு வெப்பத்தை தணிக்க கூடிய வகையில் இறைவனிடத்தில் மழையை வேண்டுகின்ற வகையில் மழை தொழுகையை நமக்கு காட்டித் தந்திருக்கின்றார்கள் அதன் அடிப்படையில்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக   02/05/2024 (வியாழக்கிழமை) காலை 6:45AM SMA கார்டணில் மழைத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி இறைவனிடத்தில் கையேந்தினர்.

அல்லாஹ்வின் தூதர் காட்டிதந்தபடி பெருநாள் தொழுகை போன்றுதொழுகையும் நாடைப்பெற்றது தொழுது முடித்ததும் வருகைதந்த அனைத்து மக்களுக்கும் குளிர்பானங்கள் வினியோகம் செய்யப்பட்டது.


என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம் 
ஆர்.புதுப்பட்டினம் கிளை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments