கோபாலப்பட்டிணத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பொதுமக்கள் சார்பாக மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை துணை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக கோபாலப்பட்டிணம் பகுதியில் தெரு குழாயில் குடிநீர் வராமல் இருந்து வருகிறது. தற்பொழுது நிலவும் கோடை வெயிலில் தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆய்வு மேற்கொள்ள துணை ஆட்சியர் வந்திருப்பதை அறிந்த மக்கள் ஊராட்சி மன்ற அலுவலத்தில் திரண்டனர். மேலும் பல ஆண்டுகளாக நிலவும் அடிப்படை தேவைகள் குறித்து துணை ஆட்சியரிடம் தங்கள் குறைகளை கூறினர். மேலும் பொதுமக்கள் சார்பில் அடிப்படை தேவைகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் குப்பைகள் அகற்றுதல் போன்ற தேவைகளை நிறைவேற்றி தர வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட அவர் அனைத்து தேவைகளும் நிறைவேற்றி தரப்படும் என்றும், தண்ணீர் வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில் மின் மோட்டார் பழுதடைந்து உள்ளதால், புதிய மோட்டார் அமைக்க உத்தரவிட்டதாக தெரிவித்ததுடன் இரண்டு நாட்களில் தண்ணீர் பிரச்சனை போக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
தண்ணீர், குப்பை, தெரு மின்விளக்கு மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை அதனால் கிராம பொதுமக்கள் பெறும் அவதியில் உள்ளாகி உள்ளார். மற்றும் தெரு மின்விளக்கு அடிபடை வசதி எதுவும் சரிசெய்து தரமால் கோபாலப்பட்டினம் கிராமத்தில் பொதுமக்கள் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் இவை அனைத்து வசதிகளையும் சரிசெய்து தருமாறு கோபாலப்பட்டினம் கிராம பொதுமக்கள் கூடுதல் ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்டம் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.