சேதுபாவாசத்திரம் அருகே கடற்பசு பாதுகாப்பு மையம் அமைய உள்ள இடத்தில் பயிற்சி கலெக்டர் ஆய்வு




சேதுபாவாசத்திரம் அருகே கடற்பசு பாதுகாப்பு மையம் அமைய உள்ள இடத்தில் பயிற்சி கலெக்டர் ஆய்வு செய்தாா்.

பயிற்சி கலெக்டர் ஆய்வு

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் அறிவுறுத்தலின்படி, தஞ்சை உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மனோரா கடற்கரையில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில், ரூ.15 கோடியில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

பின்னர், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், அதிராம்பட்டினம் கரையூர் பகுதியில் நடப்பட்டுள்ள அலையாத்தி மரக்கன்றுகள், சம்பைப்பட்டினம் காப்புக் காட்டில் நடப்பட்டுள்ள சவுக்கு மரக்கன்றுகள், அடைக்கத்தேவன் கடற்கரை பகுதியில் நடப்பட்ட பனை மரக்கன்றுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இயற்கை பேரிடர்

தொடர்ந்து கடலுக்குள் விசைப்படகு மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வனத்துறை பணிகள் குறித்து கேட்டறிந்தார். இயற்கை பேரிடரின் போது அலையாத்தி காடுகள் எவ்வாறு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது என்றும் வன உயிரினங்கள், அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் வனத்துறையினர் பயிற்சி கலெக்டருக்கு விளக்கிக் கூறினர்.

ஆய்வின்போது, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments