குரூப்-1 முதல்நிலை தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மன்னர் கல்லூரி, மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் இத்தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வை எழுத 4,482 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்கள் தேர்வு எழுத நேற்று காலையில் தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வு நடைபெறும் மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.
3,236 பேர் எழுதினர்
புதுக்கோட்டையில் 3 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 3,236 பேர் எழுதினர். இதில் 1,246 பேர் தேர்வு எழுதவரவில்லை. இத்தேர்வு முதன்மை கண்காணிப்பு அலுவலர்களாலும், கண்காணிப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை வீடியோகிராபர்கள் மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இத்தேர்வினை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.