புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால் அங்கு பயின்ற மாணவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு பணி மாறுதல் பெற்று சென்று விட்டதால் அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கல்வித்துறையும் தடுமாறி வருகிறது.
பத்தாண்டு காலம் தங்கள் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறி விட்டதால் பெற்றோர்களும் கண்ணீரில் தவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள காசிம் புதுப்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 111 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்காக ஏழு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இப்பள்ளியில் தற்போது நிரந்தர அரசு ஆசிரியர்கள் என்று யாருமே இல்லாமல் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
காரணம் இந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட நிரந்தர ஆசிரியர்கள் ஏழு பேரும் பணி மாறுதல் பெற்று வேறு வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். அதனால் நிற்கதியாய் நிற்கின்றனர் மாணவர்கள்.
இன்று மாணவர்களே பள்ளிக்கு வந்து பள்ளியை திறந்து அரசு ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலையில் இரண்டு தற்காலிக ஆசிரியர்களின் கண்காணிப்பில் பள்ளி வகுப்பறையில் அமர்ந்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வியும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் அடுத்து கல்வித்துறை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன்று மாணவர்களே பள்ளிக்கு வந்து பள்ளியை திறந்து அரசு ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலையில் இரண்டு தற்காலிக ஆசிரியர்களின் கண்காணிப்பில் பள்ளி வகுப்பறையில் அமர்ந்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வியும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் அடுத்து கல்வித்துறை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது,
“இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மேலாண்மை கல்வி குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆசிரியர்களுக்கு கூடுதல் நெருக்கடி கொடுத்ததால்தான் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை சுதந்திரமாக பணியாற்ற சில பெற்றோரும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் விடவில்லை. அதன் காரணமாகவே ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்” என தெரிவித்தனர்.
இது ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருக்கும் நிலையில் மாணவர்கள் பரிதவிக்கும் சூழலில் இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகத்திடம் கேட்டபோது,
“ஆசிரியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பணி மாறுதலை சென்றிருப்பது அவர்களின் விருப்பம். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதே வேளையில் காசிம்புதுப்பேட்டை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் நலனை தரத்தில் கொண்டு உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
ஏழு நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய பள்ளியில் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லாமல் போயுள்ளது. இது மாணவர்களின் கல்வியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ள சூழலில் விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.