ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரையில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் முற்றிலும் உடல் சிதைந்து சுமாா் 150 கிலோ எடையுள்ள அரியவகை கடல் பசு கரை ஒதுங்கியது. அந்த வழியாக மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் உயிரிழந்த கடல் பசுவை மீட்டு கால் நடை மருத்துவா் உதவியுடன் அதே பகுதியில் கூறாய்வு செய்து கடற்கரையில் புதைத்தனா். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் கப்பலில் அடிபட்டு காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம், முற்றிலும் சிதைந்ததால் ஆண் பசுவா பெண் பசுவா எனத் தெரியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.