முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், அரசு கலைக்கல்லூரிகளில் 63 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு கலைக்கல்லூரிகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆன்லைனில் எந்தெந்த கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தார்களோ? அந்தந்த கல்லூரிகளுக்கு அதன் விவரங்கள் அனுப்பப்பட்டு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி, முதல்கட்ட பொதுகலந்தாய்வு கடந்த மாதம் (ஜூன்) 10-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும் நடந்து முடிந்தது. இந்த 2 கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்திருந்த நிலையில், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் காலியாக இருந்த சுமார் 1 லட்சத்து ஆயிரம் இடங்களில், 63 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாகவும், அதாவது 63 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதாகவும், அதில் பி.காம் படிப்புகள் அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சற்று குறைவாகவும், தாமதமாகவும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க அவகாசம்
இதற்கிடையே அரசு கலைக்கல்லூரிகளில் மீதம் இருக்கும் இடங்களில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு வாய்ப்பு வழங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, https://www.tngasa.in/ என்ற தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை இணையதளம் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள காலி இடங்களில் சேருவதற்கு விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் இந்த இணையதளத்துக்கு சென்று இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகள் கலந்தாய்வு மூலம் இடங்களை ஒதுக்கி, மீதமுள்ள இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
அந்தந்த அரசு கலைக்கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும் எனவும், காலியிடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கல்லூரிக்கல்வி இயக்குனர், அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
இதற்கிடையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்த உடனேயே பாடப்பகுதிக்குள் நுழைந்து அச்சமும், மலைப்பு ஏற்படுத்திவிடாதபடி, வருகிற 10-ந் தேதி வரை வழிகாட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.